2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பாத யாத்திரை

Super User   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க மக்கள் இன்று (10) காலை  பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலயம் நோக்கி பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

மன்னார் மறைமாவட்டம் பேசாலை பங்கினைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவ்வாறு பாத யாத்திரையாக சென்றுள்ளனர்.

பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலயத்திருவிழா  வெள்ளிக்கிழமை (11) கொண்டாடப்படவுள்ள நிலையில் குறித்த ஆலயம் நோக்கி மன்னார் பேசாலை மக்கள் இன்று (10) அதிகாலை 4 மணியளவில் பேசாலை வெற்றி மாதா ஆலயத்தில் இருந்து தமது யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் இன்று மாலை பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலயத்தைச் சென்றடையும் நிலையில் மாலை இடம் பெறும் திருச்சிலுவைப்பாதை இந் நற்கருணை ஆராதனை ஆகியவற்றில் கலந்து கொள்வதோடு நாளை வெள்ளிக்கிழமை (11) காலை 7.30 மணியிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும் திருநாள் திருப்பலியிலும் கலந்து  கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .