2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கோட்டைமுனை மஹா மாரியம்மன் திருவிழா

Menaka Mookandi   / 2014 மார்ச் 16 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, கோட்டைமுனை மஹாமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் பஞ்சரத பவனி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

வசந்த மண்டபத்தில் பிள்ளையார்,மாரியம்பாள், முருகன், சிவன் பார்வதி மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோருக்கு அலங்கார உற்சவம் இடம்பெற்று சுவாமிகள் பஞ்சரதத்தில் ஆரோகணம் செய்து நகர வலம் வந்தனர்.

அடியார்கள் வடம்பிடித்திழுக்க பஞ்சரதம் பாடும்மீன் வீதி, பயனியர் வீதி, வார் விதி, செபஸ்தியார் வீதி மற்றும் நகைத் தொழிலாளர் வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வரத கோபாலகிருஷ்ண சிவாச்சாரியார் மற்றும்  உதவிக்குருமார் சகிதம் இரதோற்சவக் கிரியைகளை நடத்தினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .