2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கொம்பு முறித்தல் விழா...

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ருத்ரன்


மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மழைவேண்டி கொம்பு முறித்தல் விழா சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த இரு வாரங்களாக கலாச்சார நிகழ்வுகளுடன் இடம்பெற்று வந்த இவ் விழாவானது வடசேரி, தென்சேரி என்று ஊர்மக்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நின்று கொம்பு முறித்தல் விழாவில் ஈடுபட்டனர். இதன்போது பெரும் திராளான மக்கள் கூடி நின்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக வேளாண்மைச் செய்கை இடம்பெற்று வருகிறது. பருவகால மழை வீழ்ச்சி இல்லாது வரட்சி நிலவுவதால் வேளாண்மை செய்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தவிர்க்கவே மழை வேண்டி தங்களது குலதெய்வங்களை பிரார்த்தனை செய்தும் நேர்த்திக்கடன் மற்றும் இந்து மத கலாச்சார ரீதியிலான பாரம்பரிய கொம்பு முறித்தல் விழாக்கள் இப்பகுதி ஆலயங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிக்கப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .