Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவனந்தபுரம்:
கேரளாவில், ஒரு தனியார், 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், காற்றில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மின்னணு, 'இன்குபேட்டர்' கருவியை தயாரித்து உள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த, கே.எஸ்.யு.எம்., எனப்படும், 'கேரள ஸ்டார்ட் அப் மிஷன்' நிறுவனம், கொரோனா வைரஸ், காற்றில் பரவுவதை தடுக்க, ஒரு மின்னணு, 'இன்குபேட்டர்' கருவியை உருவாக்கி உள்ளது.'ஸ்பீக்கர்' போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு, 'வொல்ப் ஏர்மாஸ்க்' என, பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி பொருத்தப்பட்டுள்ள இடத்தில், காற்றில் கொரோனா வைரஸ் இருந்தால், அதை தடுக்கும்.இந்த மின்னணு சாதனத்தை, ஆர்.ஜி.சி.பி.,எனப்படும், ராஜிவ் காந்தி உயிரி தொழில்நுட்பவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர்.அதில், இந்த கருவி சிறந்த செயல்திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது, உறுதிபடுத்தப்பட்டது.
இந்த இன்குபேட்டர் கருவி, 15 நிமிடங்களில், கொரோனா வைரசை, 99 சதவீத அளவிற்கு குறைக்கும் திறன் உடையது.இதை, 'ஆன்' செய்துவிட்டால், 360 டிகிரி சுற்றி, ஒரு நாள் முழுதும் பாதுகாப்பு அரணாக, வைரசை ஊடுருவ விடாமல் காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago