2025 பெப்ரவரி 20, வியாழக்கிழமை

ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி..

Freelancer   / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்துடன் சேர்ந்து நடிக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்து அதில் நடிக்க முடியாமல் போனது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தனது யதார்த்த நடிப்புக்குப் பெயர் போனவர். தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட அவர், "ஜவான்", "கிறிஸ்துமஸ்" போன்ற பாலிவுட் படங்களில் நடித்து ஹிட் கொடுத்ததன் மூலம் உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான "மகாராஜா" திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து வசூலை குவித்தது. சீனாவிலும் இந்தப் படம் திரையிடப்பட்டு வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

வெள்ளித்திரையில் கலக்கி வந்த விஜய் சேதுபதி "பிக் பாஸ்" நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார். தற்போது அடுத்தடுத்த படங்களை கைவசம் கொண்டு பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, சமீபத்தில் தனியார் கல்லூரியின் கலை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அந்த விழா மேடையில் அவர் பேசிய விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேடைக்கு வந்த விஜய் சேதுபதியிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஷா, "நடிகர் அஜித்துடன் இணைந்து எப்போது படம் பண்ணப் போறீங்க? அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று கேட்க, அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி கூறுகையில், "இந்த கேள்வியை என்னிடம் பலர் கேட்டுள்ளனர். ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அது நடந்துவிடும் என்று நானும் நம்புகிறேன். இதற்கு முன் நடப்பதாக இருந்தது ஆனால் அது நடக்க முடியாமல் போய்விட்டது.. ஆனால் நடந்துவிடும் என்று நானும் நம்புகிறேன்" என்று பதிலளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X