2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Mayu   / 2024 ஜூலை 05 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்  மூன்றாம் கட்டமாக வியாழக்கிழமை (04) ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி  அகழ்வுப்பணியானது 2023 ஆம் ஆண்டு ஆணி  மாதம் தொடக்கம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது

இந்நிலையில் கொக்குத் தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்  புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி தொடர்பான  வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில்  நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாமை காரணமாக வழக்கு விசாரணைகள் தவணையிடப்பட்டிருந்தது

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு  தொடர்பான  வழக்கு  16.06.2024 அன்று முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றில் இடம்பெற்றது.

இந்நிலையில்இ அகழ்வு பணியினை நடாத்த  நிதி கிடைக்கபெற்றதாக  முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம் அவர்களால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்இ  கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி  மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்  வியாழக்கிழமை (04) இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது  

இந்நிலையில் இன்று மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது  முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்  முன்னிலையில் இன்று கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி  வளாகத்தில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, பேராசிரியர் ராஜ் சோமதேவ, காணாமல் போனோர் பணியக தலைவர் உள்ளிட்ட  சட்டத்தரணிகள், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொக்கிளாய் பகுதி  கிராம அலுவலர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்  உள்ளிட்ட அனைவரும் கலந்துரையாடி அகழ்வு பணிகள் மூன்றாம் கட்டம் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .