2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நீதி கோரி ​ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாழும் உறவுகள்

Janu   / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில்  வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள்  தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி திங்கட்கிழமை (30) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
 
நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும்   ஆர்ப்பாட்டத்தில்  ஒரு அங்கமாகவே இது முமுன்னெடுக்கப்பட்டுள்ளது.  
 
யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில்  ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம்  ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது.
 
இதையடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை குறித்து சர்வதேசமே  தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை  வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
 
 
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .