2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தைப்பொங்கலுக்கு உதவி

Editorial   / 2025 ஜனவரி 12 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன் 

யாழ் விழிப்புலனற்றோர் சங்கம் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, 320 விழிப்புலனற்ற குடும்பங்களுக்கு 500,000 ரூபாய் பெறுமதியில் பொங்கலுக்கான அரிசி சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வழங்கப்பட்டது.

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர்   யோ.சுதாகரன் தலைமையில்  சங்கத்தின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் இடம் பெற்ற இவ் உதவித் திட்டத்தை,  ஆச்சிரம முதல்வர் அமுத கலாசுரபி கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன்  சனிக்கிழமை (11)  காலை 10.30 மணிக்கு சென்று வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .