2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது

Janu   / 2024 டிசெம்பர் 29 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்ட இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் சனிக்கிழமை (28)கைது செய்யப்பட்டுள்ளார். 

வங்கியில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 15 இலட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தலைமறைவாக இருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .