.jpg)
விளையாட்டு மைதானத்தில் தமது அணியின் வெற்றிக்காக போராடிய கிறிஸ்ரியானோ ரொனால்டொ, லியனல் மேசி ஆகிய இருவரும் சிறந்த பலோன் டிஓ விருதுக்கு கடும் போட்டி வீரருக்கான போட்டியிலும் முட்டி மோதுகின்றனர். இவர்களுக்குப் போட்டியாக ஜேர்மனியின் கோல்கீப்பர் மனுவல் நெயூரும் களத்தில் உள்ளார். சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த பயிற்சியாளர்களைத் தெரிவு செய்து விருது வழங்கிவருகிறது பீபா. 1956ஆம் ஆண்டு பலோன் டிஓ விருது அறிமுகப்படுத்தப்பட்டபோது இங்கிலாந்து வீரர் ஸ்டான்லி மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார். 12ஆம் திகதி விருது பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்படும்.
சிறந்த வீரருக்கான பலோன் டிஓ விருதுக்காக சிறப்பாக செயற்பட 23 வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. உலகக்கிண்ண சம்பியனான ஜேர்மனியின் ஆறு வீரர்களும் ஜேர்மனியிடம் தோல்வியடைந்த ஆர்ஜென்டீனாவின் மூன்று வீரர்களும் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்தனர். இங்கிலாந்து பிரிமியர் லீக் தொடரில் விருது பெற்ற செளரஸின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய அவர் இத்தாலிய வீரரின் தோள்பட்டையைக் கடித்தபடியால் இந்தச் சந்தர்ப்பத்தை இழக்க நேர்ந்தது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இங்கிலாந்து வீரர்கள் எவரும் பரிந்துரைக்கப்படவில்லை.
2008 ஆம் ஆண்டு பலோன் டிஓ விருதை ரொனால்டோ பெற்றார்.
2009ஆம் ஆண்டுமுதல் 2013ஆம் ஆண்டுவரை இந்தவிருது மேசி வசமானது. 2013ஆம் ஆண்டு மேசியிடமிருந்த விருது ரோனால்டோ வசமானது. ரொனால்டோ, மூன்றாவது முறையும், மேசி ஐந்தாவது முறையும் விருதை வெல்லக் காத்திருக்கிறார்கள். இவர்களுடன் மனுவல் நொயர், முதல் முதலாக விருதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். முன்னதாக 1963ஆம் அண்டு சோவியத் யூனியன் கோல்கீப்பர் லீகா யசின் இந்த விருதை வென்றார். அதன் பின்னர் இப்போதுதான் கோல்கீப்பர் ஒருவர் இந்தவிருதை நோக்கி முன்னேறி உள்ளார்.
சம்பியன் லீக்கில் ரொனால்டோ 33 கோல்கள் அடித்துள்ளார். 13 கோல்கள் அடிக்க உதவி செய்துள்ளார். மேசி 30 கோல்கள் அடித்தார். 14 கோல்கள் அடிக்க உதவி செய்துள்ளார். நோயர் அபாரமாக விளையாடி 16 கோல்களைத் தடுத்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டியில் மேசி தங்கக் காலணியையும், நோயர் தங்கக்கை உறையையும் பெற்றனர்.
ஜேர்மனி, பிறேஸில், அமெரிக்கா, ஸ்பெய்ன், ஜப்பான், சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 வீராங்கனைகள் சிறந்த வீராங்கனை விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். ஜேர்மனியின் நடீன் கெல்லர், பிறேஸில் வீராங்கனை மாதா, அமெரிக்காவின் அபி வம்பெச் ஆகியோர் இறுதிப்பட்டியலில் உள்ளனர்.
இத்தாலி, ஜேர்மனி, ஆர்ஜென்டீனா, ஸ்பெய்ன், போத்துகல், சிலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பயிற்சியாளர்கள் சிறந்த ஆண் பயிற்சியாளர் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டனர். இத்தாலியைச் சேர்ந்த காலோஏன் செட்டி, இவர் ரியல் மட்ரிட் அணியின் பயிற்சியாளர். சம்பியன் லீக் கிண்ணத்தை வென்ற பயிற்சியாளராக உள்ளார். உலகக்கிண்ணச் சம்பியனான ஜேர்மனியின் பயிற்சியாளர் ஜோகிம் லோ, உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஜேர்மனியிடம் தோல்வியடைந்த ஆர்ஜென்டீனாவின் பயிற்சியாளர் டீகோ சைமன் ஆகிய மூவரும் இறுதிச் சுற்றில் போட்டியிடுகின்றனர்.
மிகச் சிறந்த கோல் அடித்ததற்காக புஸ்கிவிருது வழங்கப்பட உள்ளது. ஜேம்ஸ் ரொட்ரொட்டிகஸ் [கொலம்பியா], ரொபின் வன் பீரிஸ் [நெதர்லாந்து], இப்றாஹிமிவோச் [சுவீடன்] உட்பட 10 வீரர்களுடன் அயர்லாந்து வீராங்கனை ஸ்டெபானி ரோஷேயின் பெயரும் முதல்பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டது.
ரொபின் வன் பீரிஸ், ஜேம்ஸ் ரொட்டிகஸ், ஸ்டெபிபானி ரோஷே ஆகிய மூவரும் இறுதிச் சுற்றில் போட்டியிடுகிறார்கள்.
இவைதவிர பீபாவின் உலக அணிக்காக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தேசிய அணியின் பயிற்சியளர்கள், அணித் தலைவர்கள், பத்திரிகையளர்கள் ஆகியோர் இந்த விருதுகளுக்குரியவர்களைத் தெரிவுசெய்வதற்கு வாக்களிப்பார்கள்.