2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நாய்க்குப் பிறந்த பூனை

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அப்பியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாய் 3 குட்டிகள் ஈன்றது. இதில் 2 குட்டிகள் பூனை போன்று இருந்தன. ஒரு குட்டி நாய் போன்று காணப்பட்டது.

இவற்றில் 2 குட்டிகள் இறந்த விட்டன. பூனை போன்ற தோற்றத்தில் உள்ள ஆண் குட்டி மட்டுமே உயிருடன் இருந்தது. இதன் கால்கள் நாய் போலவும் உடம்பு மற்றும் வால் பகுதி பூனைக்குட்டி போன்றும் இருக்கிறது. இந்த பூனைக்குட்டி மியாவ், மியாவ் என்று கத்துகிறது.

நாயும் குட்டியை கௌவிச் தூக்கி சென்று பால் கொடுக்கிறது. பொதுவாக நாய்கள் பூனையை பார்த்தால் துரத்தும் தன்மை கொண்டன. ஆனால் இந்த நாய், தான் ஈன்ற குட்டியானது பூனை போல் இருந்தாலும் பாசத்துடன் பால் கொடுக்கிறது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து நாய் உரிமையாளர் ஆறுமுகம் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக நாய் வளர்த்து வருகிறேன். இப்போதுதான் குட்டி ஈன்று உள்ளது.

இதுதொடர்பாக கால்நடை வைத்தியர் செல்வராஜ் கூறுகையில், நாயும் பூனையும் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், ஜெனடிக் குறைபாடு காரணமாக இது போன்று பிறக்க வாய்ப்பு உள்ளது என்றார். (மாலை மலர்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .