2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நீந்தி சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 05 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின், கேரளா மாநிலத்தில்  ஆசிரியர் ஒருவர் தினமும் நீந்தி சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.

இந்தியா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியராக கடமைபுரியும் அப்துல் மாலிக் என்ற (30 வயது) ஆசிரியரே இவ்வாறு நீந்திச் சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.

தான் கற்பிக்கும் பாடசாலை 12 கிலோமீற்றர் தூரத்தில் இருப்பதால் இவ்வாறு நீந்திச் சென்று பாடம் கற்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆற்றில் கழுத்தளவு தண்ணீர் காணப்படுகின்றது. இடுப்பில் இறப்பர் டியூபொன்றை கட்டிகொண்டு தனது மதியபோசன உணவு மற்றும் காலணி, மேலாடை ஆகியவற்றை ஒரு கையில் தூக்கிக்கொண்டு தனது நீச்சல் பயணத்தை இவர் ஆரம்பிக்கின்றார்.

ஆற்றைக் கடந்து வந்த பின்னர் முதலில தனது ஆடைகளை உலர வைக்கும் இவர் பின்னர் மலைபகுதியை கடந்து செல்கின்றார். இதன்போது அவரது ஆடைகள் உலர்ந்து விடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப பாடசாலை மலைப்பாங்கான பகுதியில் காணப்படுவதால் இவர் ஆற்றை கடந்தபின் மலையேற  வேண்டிய தேவைக் காணப்படுகின்றது.

அரசாங்க பாடசாலையான மேற்படி பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இவருக்கு மாதாந்தம் சம்பளம் 25,000 கிடைக்கின்றதாம்.
20 வருடமாக இந்தப் பாடசாலையில் கல்விக் கற்பிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வரும் இவர் தனது கற்பித்தலுக்கு அப்பால் பல நலன்புரி சேவைகளையும் முன்னெடுத்து வருகின்றார்.

'பஸ்சில் வந்தால் 12 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டிவரும். அதற்குள் பாடசாலைக்கு நேரமாகி விடும். எனவேதான் நீச்சலடித்து வருகிறேன்.

இது சுலபமானதும் கூட, குறித்த நேரத்துக்கு பாடசாலைக்கும்; வந்து விடலாம். பள்ளிக்கூடத்திற்கு நேரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி வருகிறேன்' என அவ் ஆசிரியர் தனது நீச்சல் பயணம் குறித்து தெரிவித்துள்ளார். (தட்ஸ் தமிழ்)

You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Saturday, 07 September 2013 02:04 AM

    இந்த நூற்றாண்டின் அதிசய மனிதர் மட்டுமல்ல அற்புதமான உலகின் முதல்தர கடமை உணர்வுள்ள முன்னுதாரண ஆசிரிய புருஷர். இங்கே பாருங்கள் என்ன நடக்கிறது. வீட்டுக்கு பக்கத்தில் பாடசாலை தினமும் தாமதமாக பாடசாலை வருகை, அப்படி வந்தாலும் ஷோர்ட் லீவு, அப்படிதான் ஷோர்ட் லீவ் எடுத்தாலும் மாணவர் பாடசாலை விடயத்தில் அக்கறையில்லாமல் சொந்த கருமங்களுக்கு முன்னுதாரணமாய்...

    Reply : 0       0

    santhru Wednesday, 11 September 2013 03:33 AM

    unmayil ithu makaththaana sevai... niraya per ithanai paarththu seiya vendum...

    Reply : 0       0

    aswer Wednesday, 11 September 2013 06:14 AM

    மனசாட்சி உள்ள நல்ல ஆசிரியர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

    Reply : 0       0

    m. mahfool Friday, 13 September 2013 08:52 AM

    அல்லாஹ் தங்களுக்கு மறுமையில் இதற்கான நற்கூலியைத் தருவானாக என பிராத்திக்கின்றேன்.

    Reply : 0       0

    shakir Wednesday, 25 September 2013 02:43 PM

    இந்த பணியை இன்னும் அல்லாஹ் இலகுவாக்குவானாக...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .