2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

காதலன் மீதான அன்பை நிரூபிப்பதற்கு 7 வயது சிறுமியுடன் பாலியல் உறவுகொண்ட பெண் கைது

Kogilavani   / 2011 டிசெம்பர் 28 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்ணொருவர், தனது காதலரின் மீதான காதலை நிரூபிப்பதற்காக 7 வயது சிறுமியிடம் வாய்மூல பாலியல் உறவுக் கொண்ட சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

மார்கரெட் ஆன் ஓ நோயல் எனும் 26 வயதான பெண்ணே இவ்வாறான விபரீத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அப்பெண்ணின் காதலரான 26 வயதான கிறிஸ்டோபர் ஸ்மித் ஏற்கெனவே திருமணமானவர். அவர் தனது மனைவியை விட்டுப்பிரிந்து தன்னிடம் வருவதாக காதலியான மார்கரெட்டுக்கு உறுதியளித்தாராம்.

அதையடுத்து காதலன் மீதான அன்பை நிரூபிப்பதற்காக தான் 7 வயது சிறுமியுடன் வாய்மூல உறவுகொண்டதாக பொலிஸாரிடம் மார்கெரட் ஆன் தெரிவித்துள்ளார்.

புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த கிறஸ்டோபர் ஸ்மித், தனது காதலியை இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஸ்மித், மார்கெரட் இருவரும்கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்மித் மற்றொரு பெண்ணிடமும் காதல் தொடர்புகளை வைத்திருந்துள்ளார். அப்பெண்ணிடமும் மேற்படி 7 வயது சிறுமியுடன் பாலியல் உறவுகொள்ளுமாறு ஸ்மித் வலியுறுத்தியதையடுத்து அப்பெண்  பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அதையடுத்து ஸ்மித், கடந்த 5 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்மித்தின் செல்லிடத் தொலைபேசியை சோதனை செய்த பொலிஸார், மேற்படி ஏழு வயது சிறுமியுடன் ஸ்மித் மற்றும் மார்கரெட் ஆகியோர் பாலியல் தொடர்புக் கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோவை கண்டறிற்துள்ளனர்.

ஸ்மித்தின் மனைவி மேற்படி வீடீயோவை கடந்த பெப்ரவரி மாதமே கண்டுள்ளதாகவும் ஆனால் அவர் அச்சிறுமியின் குடும்பத்தை பாதுகாக்க விரும்பியதால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்காமலிருக்கத் தீர்மானித்ததாகவும்  புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்மித் மீது 24 கிரிமினல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளும் மார்கரெட் மீது 12 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
 


You May Also Like

  Comments - 0

  • janoovar Thursday, 29 December 2011 08:26 PM

    என்ன கொடுமை சேர்

    Reply : 0       0

    waaqiff Friday, 30 December 2011 01:20 AM

    இதுதான் அவர்களின் நாகரிகம் !!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .