2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கணினியிலிருந்து உங்களை பாதுகாக்க...

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


மனம் மயங்க வைக்கும் நவீன உலகத்துக்கு உங்களை தாரை வார்த்து விட்டவரா நீங்கள்! நாள் முழுவதும் இதற்காக கணினி முன்னால் அமர்ந்திருப்பதால் சோர்ந்திருப்பவரா?.

கணினிக்கு முன்னால் முறையான நிலையில் அமராத போது, முதுகு வலி, கழுத்து வலி, முழங்கால் வலி, கைகள், விரல்கள் மற்றும் மணிக்கட்டுகளில் கடுமையான வலி உணர்வுகளை எதிர்கொள்ள நேரிடும்.

நல்ல நிலையில் கணினிக்கு முன்னால் அமருவதாலும் சில நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றுவதாலும் மேற்கண்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் தவிர்க்க முடியும்.

நிற்கும் போதும் நடக்கும் போதும் அமரும் போதும் அல்லது படுக்கும் போதும் உங்களுடைய உடலை சரியான நிலையில் வைத்திருப்பதும் மற்றும் தசைகள் அல்லது மூட்டுகளில் வலி வராமல் இருக்கச் செய்வதும் தான் நல்ல நிலை எனலாம்.

தசைகளை திறமையாக பயன்படச் செய்ய விரும்பினால், எலும்புகளையும் மூட்டுகளையும் நேராக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். சரியான நிலையில் இவ்வாறு வைத்திருப்பதன் மூலமாக மூட்டுகளில் தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதை தவிர்த்திட முடியும்.

குறிப்பாக, கணினிக்கு முன்னால் நெடுநேரம் அமர நேரும் வேளைகளில், சரியான நிலையில் அமர்வது முதுகெலும்பை அழுத்தம் உணராத இடமாக வைத்திருக்கவும் மற்றும் தசை வலி மற்றும் முதுகு வலி வராமல் வைத்திருக்கவும் உதவும்.

சிறந்த பார்வைக்கு மட்டுமல்லாமல், சரியான நிலையில் அமர்வதால் தசை வலிகள் குறைவதுடன், உடலில் குறைந்த அளவு சக்தியை மட்டுமே செலவிட வைக்கவும் முடியும்.

ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்களுடைய முதுகையும் மற்றும் தோள்பட்டைகளையும் நேராக வைத்திருக்கப் பழக வேண்டும். மேலும், பிட்டங்கள் நாற்காலியின் பின்புறத்தை தொட்டுக் கொண்டிருக்கவும் வேண்டும்.

முதுகுப் பகுதியின் வளைவை சாதாரணமாக இருக்கச் செய்யும் வகையில் குஷன்களையோ அல்லது சுருட்டி வைக்கப்பட்ட டவல்களையோ பயன்படுத்தலாம்.

சரியான நிலையில் அமர்வதற்காக, நாற்காலியின் முனையில் அமர்ந்து கொண்டு, முன்னோக்கி மெதுவாக சாய்ந்து கொள்ளுங்கள். பின்னர், உங்களுடைய முதுகுப் பகுதியின் வளைவை முடிந்த வரையில் நேராக வரச் செய்யுங்கள்.

இந்த நிலையிலேயே சில நொடிகளுக்கு இருக்கவும். அதன் பின்னர், உங்களுடைய இடுப்பு பகுதிக்கு உடலின் எடையை தள்ளியவாறு சுமார் 10 டிகிரிகளுக்கு வளைந்து உட்காராலாம்.

கணினியின் திரையிலிருந்து கையை நீட்டும் தொலைவில் அமர்ந்து கொள்வதன் மூலம், பார்வையின் இடைவெளியை கட்டுப்படுத்த முடியும். வலது புறமாக முழங்கால்களை மடித்து உட்காரலாம் மற்றும் கால்களை குறுக்காக வைத்தவாறு அமர்வதை தவிர்க்கவும்.

கால் பாதங்கள் தரையை தொடுமாறு வைத்திருக்கவும் மற்றும் கண்களை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ வைத்திருக்காமல் நேராக வைத்திருக்கவும்.

புஜங்கள் மற்றும் முழங்கைகளை நாற்காலியில் ஓய்வு நிலையில் வைத்திருங்கள் மற்றும் தோற்பட்டைகளையும் ஓய்வாக வைத்திருங்கள். அவ்வவ்போது ஓய்வு இடைவேளை எடுத்துக் கொள்வதும் அவசியமானது.

30 நிமிடங்களுக்கு மேலாக ஒரே நிலையில் அமர்ந்திருப்பதை தவிர்க்கவும். நீண்ட நேரம் வேலை செய்ததாக நினைத்தால், சற்றே கழுத்துக்கான பயிற்சிகளை செய்திடுங்கள் - உட்கார்ந்த இடத்திலேயே இந்த பயிற்சியை செய்யலாம்.

கழுத்தை முன்பக்கமிருந்து, பின்பக்கமாக திருப்பவும் மற்றும் பக்கவாட்டில் இடப்பக்கமிருந்து, வலப்பக்கமாக திருப்பவும். உங்களுடைய கைகள் இரண்டையும் பின்பக்கமாக வைத்துக் கொண்டு, ஃபோர்வார்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் பெக்வார்ட் ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகளையும் கூட செய்யலாம்.

இந்த நிலையிலேயே ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு உங்களை நிலைநிறுத்தி வைத்திருங்கள். (நன்றி - தட்ஸ்தமிழ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .