2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 11/04/2016

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒழுக்கம் கற்றேனும் இல்லாத ஆண்களே, பெண்களின் கற்பைப் பற்றிப் பேசித் தீர்க்கிறார்கள். கற்பு என்பதே, இருபாலாருக்கும் பொதுவான நெறி என்பதை ஏன்தான் உணராமல் இருக்கிறார்கள்?
நெறிகெட்டவர்கள் உபதேசம் செய்யப்பட்டால், இந்தப் பூமி தாங்காது.

பூமியைத் தாய் என்று சொல்பவர்களே, தாய் போன்ற பெண்களை 'நா'வை வளைத்து இழிவுடன் பழிப்பது ஒழுக்கம் கெட்ட துஷ்டக் குணம் தான்.

ஆண் ஆதிக்க உணர்வினில், வேரோடியவர்கள் கற்புநெறியினை பெண்களுக்கு மட்டும் என மேடையேறியும் பேசுகிறார்கள்.

புருஷ லட்சணம் எது என்று தெரியாதவர்கள் பெண்களின் நெஞ்சங்களைப் புண்ணாக்குவதில், பெருமை கொள்கிறார்கள்.

படைக்கும் பெண்மையைத் துடுக்காக ஏளனம் செய்தலாகாது.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .