2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 30/03/2016

Princiya Dixci   / 2016 மார்ச் 30 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவிதமான துர்ப்பழக்கங்கள் அறவே இல்லாத இள வயதினரில் சிலர் முதுமைக் கோலத்தில் இருப்பதைக் கண்டிருப்பீர்கள்.

இளமை என்பது மனசுடன் சம்பந்தப்பட்ட விஷயமாகும். பொது வைபவங்களில் பங்குபற்றாமை, நண்பர்களே இல்லாதிருத்தல், தனிமையையே நாடுதல் போன்ற குணாதிசயங்கள் ஒருவரை, அவரின் ஆழ் மனதில் களிப்பு அற்ற, விழிப்புப் பெறாத நிலையை ஸ்திரமாக்கிவிடுகின்றன.

புத்திசாதுர்யமானவர்கள் கூட விலகி வாழப் பிரியப்படுவது அவர்களது பெறுமதி சுற்றி இருப்பவர்களால் கண்டுகொள்ளப்படாமல் போய்விடுகின்றது.

என்றும் குதுகலத்துடன் இயங்கும் முதியவர்களைப் பாருங்கள். அவர்கள் மாறா இளமையுடன் வளம்கொழிக்க இனிமைபொங்க வாழ்கின்றார்கள்.

உங்களைச் சுற்றி அன்பானவர்களை இணைத்துக்கொள்க. அழகும் இளமையும் நிலைத்துவிடும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .