2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 22/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷ்டத்தனமான எதிரிகள் கபடதாரிகளேயாவர். இவர்களுடன் சாதாரணமாகப் பழகுவதே ஆபத்து. இந்த நிலை இவர்களை எதிரிகளாக்கினால் வரும் இன்னல்களுக்கு முகங்கொடுப்பது சாதாரணமான விடயமுமல்ல.

கழகத்தில் புரண்டு, இணைந்தபடி வாழும் இத்தகையவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குபவர்கள் மிகக்குறைவானவர்களேயாவர். மறைமுகமாக அதர்மம் செய்பவர்களை தர்மவழியில் தண்டிப்பது எப்படி என்பதே ஒரு கேள்விக்குறியாகிவிட்டது.

இவர்களின் ரூபம் தெரியாமல் பழகுவது மகாபாவம். இவர்கள் தம்மிடமுள்ள பணம், பொருளினாலும் ஜாலப் பேச்சுக்களாலும் சமூகத்தை திசைதிருப்புகின்றார்கள்.

எனவே, கெட்டவர்கள் சகவாசமும் அவர்களின் போலியான  அறிவுரை எனச் சொல்லும் எதனையும் தவிர்ப்பது உசிதமானது. கெட்டவர்கள் நட்டம் விளைவிப்பதில் வல்லவர்கள்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .