2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 27/10/2015

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல்வாதிகளில் பலர் இன்னமும் ஆதிக்க நிலையில், மமதையில் தான் மக்களுடன் மாக்களைப்போல (மிருகங்களைப் போல) பழகுகின்றார்கள்.

பழைய அரசியல்வாதி பற்றி ஒரு சம்பவம் இது. அவரது இல்லத்துக்கு ஒரு பெரியவர், ஏழ்மைத் தோற்றத்துடன் வந்தார். வந்தவர் வீட்டில் உள்ள வரவேற்பறைக் கதிரையில் அமர்ந்துவிட்டார்.

அவர் இருந்து, அரசியல்வாதியின் வருகையை எதிர்பார்த்த வேளை உள்ளே வந்த அவரோ, கோபத்துடன் நீர் இந்தக் கதிரையை உங்கள் வீட்டில் இருந்தா கொண்டு வந்தீர் எனக் கேலியுடன் உறுமினார்.

வந்தவர் அதிர்ந்து விட்டார். பாட்டாளி மக்கள் வாக்களித்து இவர்களுக்கு நாடாளுமன்ற ஆசனம் வழங்கினார்கள். ஒரு மரக்கதிரைக்கு உள்ள பெறுமதியா ஒரு மனிதனின் பெறுமதி? பதவி ஆசனங்கள் மாசுபடுகின்றன‚

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .