2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

புரிதலும் காதலை வளர்க்கும்

Princiya Dixci   / 2016 நவம்பர் 29 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரிமையுடன் அதிகாரம் செலுத்தும் கணவனையே மனைவி விரும்புகின்றாள். தன்னை ஒருவன் விரும்பி, உண்மையான காதலை வெளிப்படுத்தியமையை உணர்ந்தவள், அவனது அன்பின் ஆழுமைக்குள் பிரவேசித்து விடுகின்றாள். 

இதனால், இவள் என்னவள் என்ற அதீத அன்பினால், அவள் மீது அதிகாரம் செலுத்துவது ஒன்றும் புதுமையானது அல்ல! இந்த அதிகாரத்தை மனைவி அல்லது காதலி செலுத்துவதையும் ஆண்மகன் இரசிக்கின்றான். சில சமயங்களில் போலியான கோபங்கள் ஏற்படுவது கூட மேலான காதலின் இறுக்கத்தினால் அன்றி, வேறல்ல. 

இதனை, மானசீகமாகப் புரிந்து கொள்ளாமல் ஒருவருக்கு ஒருவர் தப்பபிப்பிராயங்கள் எழுவதுண்டு. இதனை, இவர்களே புரிந்து பேசித் தீர்ப்பதும் சுலபமான விடயம்தான்.  

கணவன், மனைவி தமக்கிடையில் சின்னச் சின்னச் சண்டைகள் புரிவதும் இணைவதும் அவர்களின் காதலை மென்மேலும் வளர்க்கும். 

வாழ்வியல் தரிசனம் 29/11/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X