2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நாடகக்கலை நலிந்து விட்டது

Princiya Dixci   / 2016 நவம்பர் 30 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடித்தல் என்பது சுலபமானது அல்ல; கண்டபடி உடலை அசைப்பது நடிப்பும் அல்ல! ஒரு நல்ல நடிகன் உலகை நன்கு நோக்குகின்றான். நிஜமாக மக்கள் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் மேடை ஏறுவதோ, திரைப்படங்களில் நடிக்க முற்படுவதோ இந்தக் கலைக்கே ஒவ்வாத இயல்பு ஆகும்.  

ஆனால், இன்று மக்களின் இரசனை கண்டபடி மாறி விட்டது. நல்ல நடிப்பை இரசிக்க மறந்து, போலியான இயல்பு வாழ்க்கைக்கு முரணாக நடிப்பதும் பேசுவதும் சித்த சுவாதீனம் பிடித்தவர்கள் செயல் போல் இருக்கின்றது. ஆனால், இரசிகர்களில் பலர் இதனை இரசித்து, கைதட்டி, வரவேற்கிறார்கள்.  

இன்று நாடகக்கலை நலிந்து விட்டது. மேடை நடிகர்கள் ஒரு காலத்தில் அதனை ஒரு தெய்வீகத் தொழிலாகச் செய்தனர். இவர்கள் வறுமையில் வாழ நேர்ந்தாலும் உயிரிலும் மேலாக நடிப்புக் கலையை வளர்த்தார்கள். நாடக மேடை உலகத்தை உணர்த்தும் காட்சியறை.

வாழ்வியல் தரிசனம் 30/11/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X