Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எவரையும் பணிவுடன் கூப்பிய கரங்களால், கோபம் வரும்போது, கைகளை ஓங்கி, எவரையும் தாக்குவதற்கு எண்ணக்கூடாது.
ஆவேசப்படுதல் பல சமயங்களில் அவமானத்தையே தரும்.கடவுளை வணங்குவதற்கும் ஈகை செய்வதற்குமான கரங்களால், கறைபடிந்த காரியங்களைச் செய்வதற்கு முனைதல் கூடாது.
கரங்களை ஏந்துவது இறைவனுக்கு மட்டும்தான். பண்பான பெரியவர்களை உள்ளத்தில் இருத்தி, கௌரவிப்பதனால் எமது அடுத்த சந்ததியினர் நல்வழியில் வாழும் முறையைக் கற்றுக் கொள்கின்றார்கள்.
வினயமுடையவர்களுடன் அனைத்து மாந்தர்களும் இணைந்து கொள்ள விரும்புவார்கள்.
உங்களை நீங்கள் செதுக்கிக் கொண்டு, புதுவடிவம் பெற, பணிவு, கனிவு என்கின்ற ஆயுதங்களை நெஞ்சத்தில் ஏந்துக.
ஒழுக்க வாழ்வின் தலைமைப் பொறுப்பு, அனைவருக்குமானது; உலகம் உங்களுக்கானது.
வாழ்வியல் தரிசனம் 25/04/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago