2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யானையின் சடலம் மீட்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 17 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கும் ஒட்டுசுட்டானுக்கும்  இடைப்பட்ட மேளீவனம் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று நேற்று (a) அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றவர்களால் குறித்த யானை  அடையாளங் காணப்பட்ட நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த யானையின் ஒருகாலில் காயம் காணப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இறந்த யானையின் உடற்கூற்று பரிசோதனைகள் இன்று (17) மேற்கொள்ளப்படும் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .