2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

செலான் வங்கி சிறுவர்கள் மத்தியில் இயற்கை பாதுகாப்பு பற்றிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு

S.Sekar   / 2022 ஜூன் 10 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) உடன் பங்காண்மையை ஏற்படுத்தி, ‘Wild Kids’ திட்டத்தை முன்னெடுத்திருந்தது. இதனூடாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மத்தியில் இயற்கை பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கொழும்பில், “ஈரநில பூங்கா நடை” நிகழ்வில் 50 க்கும் அதிகமான சிறுவர்கள் பங்கேற்றிருந்தனர். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மரங்கள், விலங்குகள் மற்றும் ஈரநிலைத்தில் அவற்றின் நடத்தைகள் தொடர்பில் இந்த நடையின் போது அவர்கள் அவதானித்திருந்தனர். விசேடத்துவமான வழிகாட்டல்களினூடாக ஈரநிலங்களின் சூழல் கட்டமைப்பு பற்றி இந்த சிறுவர்கள் அறிந்து கொண்டனர். அவர்களுக்கு விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இயற்கையை பாதுகாப்பது தொடர்பில் அவர்களை தொடர்ந்தும் ஈடுபடுத்துவதற்காக செலான் டிக்கிரியினால் வெகுமதிகளும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டிருந்தனர்.

செலான் டிக்கிரி மற்றும் Fox Resort ஆகியவற்றின் பங்காண்மையின் கீழ் யாழ்ப்பாணத்தில் ஓவிய பயிற்சிப்பட்டறை மற்றும் போட்டியான “ஓவியத்தினூடாக இயற்கை” என்பது முன்னெடுக்கப்பட்டிருந்தது. மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு டிக்கிரி கணக்குகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டிருந்ததுடன், பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட்டிருந்தன. Fox Resort ஹோட்டலில் காணப்படும் art gallery மற்றும் அருங்காட்சியகம் போன்றன உள்ளடங்கலாக, இலவச சுற்றுப் பயண வசதியும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. செலான் வங்கியின் யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் நிர்மலன் நந்தகுமார் சிறுவர்களுடன் உரையாடியிருந்ததுடன், தமது எதிர்காலத்துக்காக சேமிப்பதுடன், சூழலை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியிருந்தார்.

நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில், சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை செலான் டிக்கிரி முன்னெடுப்பதுடன், எதிர்காலத்துக்கு தம்மை தயார்ப்படுத்திக் கொள்வது பற்றியும் அறிவூட்டுகின்றது. சமூகப் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், அன்புடன் அரவணைக்கும் வங்கியினால் இயற்கை பாதுகாப்பு தொடர்பில் இந்த ஊக்கமளிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், புவியை பாதுகாப்பது தொடர்பிலும் சிறுவர்கள் பயில்கின்றனர். WNPS உடனான பங்காண்மையில் செலான் வங்கியினால் முன்னெடுக்கப்படும் தொடர் செயற்திட்டங்களின் அங்கங்களாக இந்த இரு திட்டங்களும் அமைந்துள்ளன.

உலகின் மூன்றாவது பழமையான இயற்கைப் பாதுகாப்பு சங்கமாக WNPS அமைந்துள்ளது. ‘Wild Kids’ திட்டத்தினூடாக, சிறுவர்கள் மத்தியில் சூழல் தொடர்பான ஈடுபாட்டை கட்டியெழுப்ப எதிர்பார்க்கப்படுவதுடன், கல்வி மற்றும் களிப்பூட்டும் செயற்பாடுகளினூடாக பாதுகாப்பு தொடர்பான முக்கியத்துவம் உணர்த்தப்படுகின்றது.

சிறுவர்களின் ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்க அம்சங்களை தூண்டி, அவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை செலான் டிக்கிரி தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது. அதன் பிரகாரம், டிக்கிரி கணக்குதாரர்களுக்கு பல கல்வி மற்றும் களிப்பூட்டும் செயற்பாடுகளில் பங்கேற்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அதனூடாக டிக்கிரி அன்பளிப்புகள் மற்றும் அன்பளிப்பு வவுச்சர்களையும் வெற்றியீட்டக்கூடியதாக இருக்கும். ‘Wild Kids’ போன்ற பிரத்தியேகமான அனுகூலங்களினூடாக, சிறுவர்களுக்கு சிறு வயது முதல் சமூகத்தில் பொறுப்பு வாய்ந்தவர்களாக திகழ்வதற்கு வலுவூட்டப்படுவதுடன், சிறந்த பழக்கங்களை தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .