2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

லொறி குடைசாய்ந்து விபத்து

Editorial   / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

யாழ்பாணத்திலிருந்து நுரைச்சோலை நோக்கி பயணித்த  லொறியொன்று,  புத்தளம் எச்.என்.பி. வங்கிக்கு முன்பாக,  வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம், இன்று (17) இடம்பெற்றுள்ளது. சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டமையே, விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான லொறியின்  சாரதி  உயிர்தப்பியுள்ளதுடன்,  காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென,  பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .