Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
ஹிரான் பிரியங்கர / 2017 ஜூன் 21 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த கேரளக் கஞ்சாவைத் திருடி விற்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் இருவரைக் கைதுசெய்துள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றிரவு, பாலாவி பிரதேசத்தில், சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரைக் கைதுசெய்து பரிசோதித்தபோதே, அவர்களிடமிருந்து 5 கிலோகிராம் கேரளக் கஞ்சாவைக் கைப்பற்றியதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரெண்டு பேரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில், ஒரு குழுவாகச் சேர்ந்து, புத்தளம் நீதிமன்றத்தின் கூரையைப் பிரித்துக்கொண்டு, 20 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடந்த 5ஆம் திகதி களவெடுத்துள்ளமை தெரியவந்தது. அத்துடன், மீதமான 15 கிலோவையும் அவ்வப் பொழுது விற்றுவிட்டனர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று தெரிவித்த பொலிஸார், அந்த இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago