2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

Princiya Dixci   / 2017 மே 14 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி பத்தலங்குண்டு தீவுப்பகுதியில் இருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர், மன்னார் வங்காலை கடற்கரைப் பிரதேசத்தில் கரையொதுங்கிய நிலையில், இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, கற்பிட்டி  பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி பத்தலங்குண்டு பள்ளிவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்ணகுலசூரிய ஜோசப் பெர்ணான்டோ (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை காலை, பத்தலங்குண்டு பள்ளிவத்தைப் பகுதியிலிருந்து இரண்டு மீனவர்கள் சிறிய படகு ஒன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவ்வாறு குறித்த இரண்டு மீனவர்களும் பயணித்த சிறிய படகு கடற்பகுதியில்  விபத்துக்குள்ளாகியமையினால் இரண்டு மீனவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

ஒருவர் சம்பவம் இடம்பெற்ற சொற்ப நேரத்தில் ஏனைய மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ள போதிலும் மற்றைய மீனவர் அலையில் அள்ளுண்டு காணாமல் போயிந்தார்.

எனினும், காணாமல் போன மீனவரைத் தேடி கடற்படையினரும் பொலிஸாரும், மீனவர்களும் கூட்டாக இணைந்து புதன்கிழமை முழுநாளும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பத்தலங்குண்டு பள்ளிவத்தை மீனவர்கள் அனைவரும் வியாழக்கிழமை தமது மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு காணாமல் போன மீனவரைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன், மன்னார், சிலாவத்துறை ஆகிய பிரதேச மீனவர்களுக்கும் காணாமல் போன குறித்த மீனவர் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போன குறித்த மீனவரின் சடலம், நேற்றுக் காலை மன்னார் வங்காலை கடற்பிரதேசத்தில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மீனவரின் சடலத்தின் முகப்பகுதி அடையாளம் தெரியத வகையில் உருக்குலைந்துள்ளதாகவும் அந்த மீனவர் அணிந்திருந்த ரி-சேர்ட் மற்றும் காற்சட்டை என்பனவற்றை வைத்தே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கற்பிட்டி பத்தலங்குண்டு காரைதீவு வேலாங்கன்னி மீனவர் சங்கத்தலைவர் அன்ரனி பொன்சேகா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .