2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

ஓலைக் குடில் முற்றாக தீக்கிரை

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு தெற்கு கிராம சேவகர் பிரிவில், ஓலைக் குடில் ஒன்று, நேற்று (11) முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியிலுள்ள மக்கள் ஒன்றிணைந்து,  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயன்றபோதிலும் , வீடு முழுமையாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

தீ விபத்தில், வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் தீக்கிரையாகியுள்ளதுடன், எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லையென,  பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை,  உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X