2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

யாழில் வாள்வெட்டு: இருவர் காயம்

Freelancer   / 2022 மே 05 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக நேற்று (4)  இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.

3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன், மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .