2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மாணவியின் கையை பதம் பார்த்த ஆசிரியர்

Freelancer   / 2023 ஜூலை 07 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 3இல் கல்வி கற்கும் , மாணவி ஒருவரை ஆசியர் தாக்கியதில் மாணவி பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் கல்வி கற்று வரும் குறித்த மாணவிக்கு நேற்றைய தினம் பாடசாலையில் வைத்து ஆசிரியர் ஒருவர் அடித்து கண்டித்துள்ளார்.

இதனால் மாணவியின் கையில் காயம் ஏற்பட்டு, கை தூக்க முடியாத அளவுக்கு மாணவி பாதிப்படைந்திருந்தார். 

அதனை அடுத்து , பாடசாலை நிர்வாகம் மாணவிக்கு அருகில் உள்ள மருந்தகம் ஒன்றில் எண்ணெய் ஒன்றினை வாங்கி பூசியுள்ளனர்.

மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னரும் , கை வலிியால் அவதிப்பட்ட நிலையில் , பெற்றோர் அது தொடர்பில் விசாரித்த போது, மாணவி பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் விபரித்துள்ளார்.

அதனை அடுத்து மாணவியை பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .