2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மாடுகளை திருடிச் சென்றவர் கைது

Freelancer   / 2023 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து 3 மாடுகளை திருடிச் சென்ற ஒருவர்  வியாழக்கிழமை (03) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகனத்தில் மாடுகளை கடத்துவதாக, மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நவாலி மயானத்துக்கு அருகில் வைத்து, யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .