2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மரத்திலிருந்து விழுந்து குடும்பஸ்தர் மரணம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 09 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - இளவாலை பிரதான வீதி, மாதகல் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் மரத்தில் இருந்த கொப்புகளை வெட்டுவதற்காக ஏறிய வேளையே மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

சம்பவத்தில், பாக்கியநாதன் ஜோசப் இமானுவேல் (வயது 66) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .