Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் பிரதேசத்தில் , தங்களை பொலிஸார் என்று அறிமுகப்படுத்தி 23 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தர்மடம் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் நால்வர் சென்று தம்மை பொலிஸார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பின்னர் கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது என கூறி, கடைக்குள் அத்துமீறி நுழைந்த தேடுதல் நடத்தி கடையில் இருந்த 23 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, கடையிலிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடை உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ் பொலிஸார் , இருவரைக் கைது செய்துள்ளதுடன் மேலும் இருவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago