2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பேரணிக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

Niroshini   / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், என்.ராஜ் 

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டப் பேரணியை, மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள்  தடை விதிக்கக் கோரி, சுன்னாகம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட  தடை உத்தரவு விண்ணப்பத்தை, மல்லாகம் நீதவான் நிபந்தனைகளுடன், இன்று (05) தள்ளுபடி செய்துள்ளார். 

பொதுதொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ், இந்த விண்ணப்பம் சுன்னாகம் பொலிஸாரால் கடந்த புதன்கிழமை மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

அன்றைய தினம், குறித்த மனு மீதான விசாரணையை, வெள்ளிக்கிழமை (05) திகதியிட்டு, நீதவான் ஒத்திவைத்தார். 

அதன் பிரகாரம், இன்றைய தினம் (05) மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது,  மக்களுக்கு பேச்சு, கருத்து மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் உண்டு எனச் சுட்டிக்காட்டிய நீதவான்,  பேரணியில், சுகாதார நடைமுறைகளுடன் மக்கள் கலந்துகொள்ள முடியும் என கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குள், பேரணி நடத்த தடை கோரி சாவகச்சேரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவும், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .