2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தனிமையில் இருந்தவரை கட்டிவைத்துவிட்டு கொள்ளை

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 26 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்


முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் நகர்பகுதிக்கு அண்மித்த பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்தவரை கட்டிவைத்துவிட்டு, பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்தவர் இரவு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த ,சமயம் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் அவரை கட்டிவைத்து கத்திமுனையில் அவர் அணிந்திருந்த நகைகள்  கொள்ளையடித்துள்ளதுடன், வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில்  இருந்த மதுபானங்களையும் எடுத்து அருந்திவிட்டு சென்றுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .