2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகள் ஆராய்வு

Princiya Dixci   / 2022 மார்ச் 30 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனின் அறிமுக உதவியுடன்,  இணைத் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற முதலாம் காலாண்டுக்கான புதிய வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள்   உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ சுமந்திரன், செல்வராஜா கஜேந்திரன், கரைச்சி கண்டாவளை பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .