2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஹெரோய்ன் மீட்பு

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹான போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், தலங்கம, ஹோமாகம பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (31) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஹெரோய்ன் வைத்திருந்த 32, 46 வயதான இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்கள், ஹோகந்தர, ஹோமாகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். ஹோகந்தரப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராமும் 160 மில்லிகிராம் எடைகொண்ட ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.

 மற்றையவரிடமிருந்து, 1 கிராமும் 100 மில்லிகிராம் எடைகொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இரு சந்தேகநபர்களிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .