2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ரூ.34 இலட்சம் பெறுமதியான சிகரெட்கள் மீட்பு

Princiya Dixci   / 2016 மே 03 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு - தெரியமுல்லப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்கள், பதுக்கி வைப்பட்டிருந்த நிலையில் நீர்கொழும்பு விசேட போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர், நேற்று திங்கட்கிழமை (02) அவற்றைக் கைப்பற்றியுள்ளனர். 

95,600 சிகரெட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. 

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் தனியார் நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற முகாமையாளரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .