2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

களுத்துறை துப்பாக்கிச்சூடு நாளை களவிசாரணை

Kogilavani   / 2017 மார்ச் 07 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழு நாளை, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் செல்லவுள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி காலை, களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது இனந்தெரியாத சிலர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதில், 7 பேர்  உயிரிழந்ததோடு, இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள, சிறைச்சாலைகள் அமைச்சினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

மேலும், குறித்த குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடி, ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், நாளைய தினம், சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இ​ரண்டு மாதங்களினுல் இந்த விசா​ரணையை முடித்து, இறுதி அறிக்கையை ஒப்படைப்பதாக சிறைசாலைகள் அமைச்சு ​தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .