Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Kogilavani / 2017 மார்ச் 07 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழு நாளை, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் செல்லவுள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி காலை, களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது இனந்தெரியாத சிலர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதில், 7 பேர் உயிரிழந்ததோடு, இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள, சிறைச்சாலைகள் அமைச்சினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
மேலும், குறித்த குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடி, ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், நாளைய தினம், சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இரண்டு மாதங்களினுல் இந்த விசாரணையை முடித்து, இறுதி அறிக்கையை ஒப்படைப்பதாக சிறைசாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
2 hours ago