2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மானை வேட்டையாடிய மூவர் கைது

Janu   / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேயிலை தோட்டப்புறங்களில் சுற்றித்திரிந்த மானை வேட்டையாடியதாக சந்தேகத்தின் பேரில் மூவர் ஞாயிற்றுக்கிழமை (22)   கைது  செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொனாக் தேயிலை தோட்டத்தில் இறைச்சிக்காக விற்பனை செய்வதற்காக மானை வேட்டையாடியதாக ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்களான மூவரை  கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட  மூவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .