Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 16 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த, வலப்பனை, அம்பகமுவ மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலக பிரிவில் இயங்கும் சமுர்த்தி வங்கிகளில் தற்காலிகமாக உதவி முகாமையாளர் பதவிகளை வகித்து வந்த ஏழு பேருக்கு நிரந்தர உதவி முகாமையாளர் நியமனம் மாவட்ட செயலாளர் நந்தன கலபடவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு மாவட்ட சமுர்த்தி பணியின் அத்தியட்சகர் எஸ்.எம்.ரத்ணதாஸ தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இயங்கும் சமுர்த்தி திணைக்களத்தில் புதன்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது .
இதன்போது ஹங்குராங்கெத்த பிரதேச செயலக பிரிவு சமுர்த்தி வங்கிக்கு கே.எம்.உடுவெல்ல, வலப்பனை பிரதேச செயலக பிரிவு சமுர்த்தி வங்கிக்கு பி.ஜி.ஐ.பாலசூரிய, நுவரெலியா பிரதேச செயலக பிரிவு சமுர்த்தி வங்கிக்கு கே.ஏ.நவநீதராஜா, .யு.எம்.விக்ரமசிங்க, ஆர்.எஸ்.நிலந்தி குமாரி ஆகியோருக்கு உதவி வங்கி முகாமையாளர் நியமன கடிதம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவு சமுர்த்தி வங்கிக்கு எஸ்.டி.வனிகசேகர, மற்றும் கே.எஸ்.கே.ரணசிங்க ஆகியோர் உதவி வங்கி முகாமையாளர் நியமனம் பெற்று இவர்கள் அனைவருக்குமான நியமன கடிதங்களை மாவட்ட செயலாளர் நந்தன கலபட உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
28 minute ago