Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 மார்ச் 20 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீடொன்றில் திருடப்பட்ட 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல், 40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பதுளை, மெதபத்தனை பகுதியில் வீடொன்றில் யாரும் இல்லாதபோது ஜன்னலை உடைத்து உள் புகுந்து தங்க வளையல் ஒன்றையும், 37,000 ரூபாய் பணத்தையும் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றிக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 22 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர் .
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது திருடப்பட்ட பணத்தை தான் செலவிட்டதாகவும் தங்க வளையலை , தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் .
மேலும், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் .
பாலித ஆரியவன்ச
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago