Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Editorial / 2025 மார்ச் 21 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி அச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், அச்சிறுமியின் தந்தையின் நண்பரான 50 வயது நபர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் ஒரு குடிகாரர், சிறுமியின் தந்தையுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையானவர்.
கடந்த 19 ஆம் திகதி, இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு, தந்தை வீட்டை விட்டு வெளியேறிய போது, சந்தேக நபர் சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து, அவரை பயமுறுத்தி, வீட்டின் தோட்டத்திற்கு கீழே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி வீட்டில் இல்லாததை உணர்ந்த தந்தை, இதுகுறித்து விசாரித்தபோது, சிறுமி அருகிலுள்ள புதரிலிருந்து வந்திருப்பதைக் கண்டார்.
நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறிய பிறகு, தாயும் சிறுமியும் தனமல்வில பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்தனர்.
சந்தேக நபரான அண்டை வீட்டார், தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
6 hours ago