2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

சாரதிக்கு தூக்க கலக்கம் ; லொறி விபத்து

Janu   / 2025 மார்ச் 23 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளியாப்பிட்டியவில் இருந்து ஹட்டன் நோக்கி கால்நடை தீவனத்தை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்  ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை ஹட்டன் ஷனன் தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என ​பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தின் போது லொறியில் மூவர் பயணித்துள்ளதுடன்  யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X