2025 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

சிகரெட்டுகளுடன் ஹட்டன் இளைஞன் கைது

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கேகாலை   பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை கேகாலை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கேகாலை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை (23)ஒரு சோதனை நடத்தப்பட்டது, அதன் போது சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 240 சிகரெட்டு பண்டல்களை வைத்திருந்த ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கேகாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X