2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இரவுநேர சிறப்பு ரயில்கள் இரத்து

Editorial   / 2024 மே 26 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் பதுளை, பதுளை மற்றும் கொழும்புக்கு இடையில் இயங்கும் இரவு நேர சிறப்பு ரயில்கள் இன்று (26) மூன்றாவது நாளாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மலையக புகையிரத தண்டவாளங்களின் மீது மரங்கள் முறிந்து விழுந்து கற்கள் வீழ்ந்துள்ளமையினால் இந்த நாட்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இவ்விரு இரவு நேர ரயில்களையும் இயக்காமல் இருப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் பதுளை, பதுளை மற்றும் கொழும்பு இரவு அஞ்சல் ரயில்கள் உட்பட ஏனைய புகையிரதங்கள் இன்று இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X