Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 16, புதன்கிழமை
Editorial / 2018 மே 21 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் காணப்படும். காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் காளானில் உள்ள லென்ட்டைசன் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
பொட்டாசியம் சத்து உணவுப் பொருட்களில் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. இப்பொட்டசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான் ஆகும். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்தும், சோடியமும் உள்ளது. எனவே, இதயத்தைக் காப்பதற்கு சிறந்த உணவாக காளான் உள்ளது.
காளானின் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த மூட்டு வாதம் உடையவர்களுக்கு, நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். அத்துடன் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றி சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.
உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடல் இளைத்தவர்கள் தினம் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago