Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 ஜூன் 13 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் 86 கசிப்பு போத்தல்கள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மாவட்ட புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து ஆரையம்பதி சிகரம் பிரதேசத்திலுள்ள கசிப்பு விற்பனை நிலையத்தை செவ்வாய்க்கிழமை (13) முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்து 86 போத்தல் கொண்ட 63 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கசிப்பை மீட்டதுடன் வியாபாரத்தில் ஈடுபட்ட 49 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .