Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை சுகாதாரப் பிரிவில், காத்தான்குடியுடன் தொடர்புபட்ட வர்த்தகர்களுக்கு எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் வாழைச்சேனை பிரதான சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் மூவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று, கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த வியாபார நிலையங்கள் மூடப்பட்டன.
இதனையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடும் சுகாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், வாழைச்சேனை பிரதான சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வியாபார உரிமையாளர்கள், தொழில் புரிபவர்களின் பாதுகாப்புக் கருதி வியாபார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறும், நாளை செவ்வாய்க்கிழமை (05) வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் வாழைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகம் ஆகியவற்றுக்குட்பட்ட பிரதான வீதியிலுள்ள அனைத்து வியாபார உரிமையாளர்கள், தொழில் புரிபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்து அவசர உயர்மட்ட கலந்துரையாடலொன்று, வாழைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (04) நடைபெற்றது.
வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ரீ.ஸ்டீப் சஞ்ஜீவ், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ரீ.நஜீப்கான், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் றெஜினோல்ட் விஜிதரன், வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நாளை (05) மேற்கெள்ளப்படவுள்ள அன்டிஜன் பரிசோதனை மூலம் எவ்வாறான வியாபார நிலையங்களை மாத்திரம் திறப்பது என்று தீர்மானிக்கப்படும் என்று இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ள வெளிமாவட்ட மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை தங்கள் பகுதிக்குக் கொண்டு செல்வதாயின் வருகை தரும் போது பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் மற்றும் குறித்த பிரதேசத்தின் மீன்பிடித் திணைக்களத்தால் வழங்கப்படும் அனுமதி கடிதத்துடன், இம்மாதம் 16ஆம், 17ஆம், 18ஆம் திகதிகளில் கட்டம் கட்டமாக வருகை தந்து படகுகளை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago