2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மாணவர்களுக்கு கௌரவிப்பு

Freelancer   / 2023 ஜூன் 14 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியைச் சேர்ந்த 5மாணவர்களுக்கு சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியைச் சேர்ந்த 5மாணவர்களுக்கு சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது கிடைத்துள்ளதுடன் அவர்களுக்கு சின்னம் சூட்டி,பாராட்டி,கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியில் அதிபர் இராசதுரை பாஸ்கர் தலைமையில் திங்கட்கிழமை (14) நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்ட அதிதிகளினால் 2022ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சாரணர் விருதுபெற்ற 5மாணவர்களுக்கும் சின்னம் சூட்டப்பட்டு,பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களுக்கான ஜனாதிபதி சாரணர் விருதுச்சான்றீதழ் வடமத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X