Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மரம் ஒன்றை வெட்டுவதற்காக மரத்தில் ஏறி மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த ஒருவர் மரத்தில் இருந்து தவறி நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (2) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவடிமுன்மாரி 40ம் கொலனியைச் சேர்ந்த 35 வயதுடைய தர்மலிங்கம் லக்ஸ்மன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாவடி முன்மாரி பகுதியில் உள்ள மரம் ஒன்றை வெட்டுவதற்காக காலை 10 மணிக்கு மரத்தில் ஏறி மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது மரத்தில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago